×

அடுத்த 3 மாதங்களுக்கு வெங்காயத்தை உணவில் சேர்க்காமல் இருந்தால் உடல் நலம் ஒன்றும் பாதித்துவிடாது: மகாராஷ்டிரா அமைச்சர் தாதா பூஸ் சர்ச்சை கருத்து

மும்பை: அடுத்த 3 மாதங்களுக்கு வெங்காயத்தை உணவில் சேர்க்காமல் இருந்தால் உடல் நலம் ஒன்றும் பாதித்துவிடாது என மகாராஷ்டிரா அமைச்சர் தாதா பூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் விநியோகத்தை அதிகரிக்கவும் வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு விதித்துள்ளது. நாட்டில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து, வெங்காயத்தின் விலையும் அதிகரித்தது.

இதனால் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தனது கையிருப்பில் உள்ள 3 லட்சம் டன் வெங்காயத்தை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், விலையை கட்டுப்படுத்தவும். உள்நாட்டு சந்தையில் விநியோகத்தை மேம்படுத்தவும் வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த 40 சதவீத ஏற்று மதி வரி, வரும் டிசம்பர் 31 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெங்காய விலையுயர்வு குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் தாதா பூஸ் சர்ச்சை ஏற்படுத்தும் தெரிவித்துள்ளார். “வெங்காய விலை உயர்வாக கருதினால் மக்கள் அதனை சாப்பிடாமல் இருக்கட்டும், அடுத்த 3 மாதங்களுக்கு வெங்காயத்தை உணவில் சேர்க்காமல் இருந்தால் உடல் நலம் ஒன்றும் பாதித்துவிடாது” என மகாராஷ்டிரா அமைச்சர் தெரிவித்துள்ளார். வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40%ஆக விதித்து ஒன்றிய அமைச்சரவை அறிவித்ததை அடுத்து, அமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post அடுத்த 3 மாதங்களுக்கு வெங்காயத்தை உணவில் சேர்க்காமல் இருந்தால் உடல் நலம் ஒன்றும் பாதித்துவிடாது: மகாராஷ்டிரா அமைச்சர் தாதா பூஸ் சர்ச்சை கருத்து appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Minister ,Dada Boos ,Mumbai ,
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி